×

சிங்கிள் டீக்கு ஆசைப்பட்டு ₹12,000 இழந்த முதியவர் : பைக் நபருக்கு வலைவீச்சு

ஆவடிஒரு டீக்கு ஆசைப்பட்டதால் 12 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்து முதியவர் தவித்து வருகிறார்.ஆவடியை அடுத்த திருநின்றவூர் கொசவன்பாளையம் என்எஸ்கே.நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (60).  இவர் அம்பத்தூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வுப்பெற்றவர். அம்பத்தூர் டவுன் ஷிப் ரோட்டில் உள்ள ஒரு வங்கிக்கு நேற்று காலை வெங்கடேசன் வந்து, தனது கணக்கில் இருந்து  12 ரூபாய் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். இதன்பின்னர் பஸ் ஸ்டாப்புக்கு செல்வதற்காக நடந்து சென்றபோது பைக்கில் ஒரு வாலிபர் வந்து வெங்கடேசனிடம் அன்பாக பேசியுள்ளார்.

பின்னர் அந்த நபர், வெங்கடேசனை பஸ் ஸ்டாப்பில் விட்டுவிடுவதாக கூறி, பைக்கில் ஏற்றிச்சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும் ஒரு டீக்கடையில் பைக்கை நிறுத்திவிட்டு டீக்குடிக்க போகலாம் என்று  அந்த நபர் கூறியதையடுத்து, அவருடன் வெங்கடேசன் சென்றுள்ளார்.அப்போது அந்த நபர், உங்கள் பையை பைக்கில் பத்திரமாக வைத்துவிட்டு செல்வோம் என்று கூறி பையை வாங்கிக்கொண்டு  அங்கிருந்து மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் கூச்சலிட்டதால் அப்பகுதியினர் திரண்டுவந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.இதுபற்றி வெங்கடேசன் கொடுத்துள்ள புகாரின்படி, அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதுரை வழக்குப்பதிவு செய்து பைக்கில் தப்பிய நபரை தேடி வருகின்றார்.

Tags : bike person ,Webster , சிங்கிள் டீ
× RELATED ஸ்லோவாக்கியா துப்பாக்கிச்சூடு: பிரதமர் கண்டனம்